• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளிநாட்டில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு

Dez 24, 2021

வெளிநாட்டு பிரஜாஉரிமைபெற்றவர்கள் இலங்கைபிரஜை ஒருவரை திருமணம் செய்ய புதிய நடைமுறை. 2022.01.01 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

1. தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின் பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும். (Security clearance Report)

2. சுகாதார நிலை பற்றிய சுய பிரதிக்கினை.
(Health Declaration) சமர்ப்பிக்க வேண்டும்.

3. திருமணங்களை சாதாரண விவாக பதிவாளர்கள் மூலம் பதிவு செய்ய முடியாது.

4. பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே பதிவு செய்ய முடியும்.

5. மேலதிக விபரங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இச்சுற்று நிருபத்தை பதிவாளர் நாயகம் திணைக்கள இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed