• Do. Apr 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி திருவிழா.

Mrz 1, 2022

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இராணுவம், காவல்துறை, சுகாதாரத் துறையினர் இணைந்து இந்தப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துதலிலும், மன்னார் மாவட்டச் செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரின் மேற்பார்வையில் வெளிநிர்வாக ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பக்திபூர்வமாக பூஜைகள் நடைபெற்று வருவதுடன், பக்தர்களும் மிக அமைதியாக தீர்த்தம் எடுத்து வந்து மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே திருக்கேதீஸ்வரத்தில் வலுவூட்டல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதாக தெரியவருகிறது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed