• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

Mrz 22, 2022

200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த நவக்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயப் பிலவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை புதன்கிழமை(23-03-2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது என மேற்படி ஆலய பரிபாலன சபையின் செயலாளர் விநாசித்தம்பி திருச்செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும், அடுத்தமாதம்-02 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்கு மாங்கனி உற்சவமும், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05 மணிக்குத் திருவேட்டை உற்சவமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலங்களில் தினமும் பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed