• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மட்டக்களப்பில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட பெண்!

Mrz 31, 2022

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சவுக்கடி முருகன் கோயில் வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் வசிக்கும் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவரது வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்த நிலையில், உறவினர்களால் சடலமாக மீட்கப்பட்டு உடற்கூற்றாய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் வயது 40 என்பவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவே பலமுறை தாக்கப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 13 தையல்கள் இடப்பட்டு குணமடைந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed