• Di. Apr 23rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவைச் சேர்ந்த மூவரைக் காணவில்லை!

Apr 12, 2022

நுவரெலியா – றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன், ஏனைய நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு காணாமல்போனவர்களில் 2 பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed