• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஓமந்தையில் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

Apr 19, 2022

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரனாடக்கல் பகுதியில் 18 வயதுடைய இளைஞன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் சடலத்தை ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் ஓமந்தையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed