• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாழ்வில் வளம்பெற அட்சய திருதியை நாளில் என்ன செய்யவேண்டும்.

Mai 2, 2022

சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நட்சத்திரம் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நாளை) கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும்.

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும். புராண காலத்தில் சித்திரை மாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள் செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்றும், வேத காலங்களில் சான்றோர்கள் அட்சய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்கள்.

அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளின் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து.

அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வில் வளம் பெருகும். மேலும் தங்கம், வெள்ளி வாங்குவது சிறந்தது ஆகும். தங்கம் வாங்குவதை விட உப்பு அல்லது மஞ்சள் வாங்கினால், தங்கம் வாங்குவதை காட்டிலும் பலன் அதிகம்.

அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது எப்படி…?

அட்சய திருதியை நாளன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

கோலம் போட்டபின் அதன்மேல் ஒரு பலகை வைத்து அதில் கோலமிடுங்கள். அதில் வாழை இலையை போட்டு, அதன் நடுவே பச்சரிசியை பரப்பி, அதன்மேல் செம்பில் நீர் நிரப்பி, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக அமைத்திடுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள்.

லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். பின்னர் காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு வாழையிலையில் வலப்பக்கம் வையுங்கள்.

நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். முதலில் விநாயகரை மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்து தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

அன்றைய தினம் மாலையில் கலசத்துக்கு மீண்டும் தூப தீப ஆராதனையை காட்டி, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

அட்சய திருதியை நாளில் பயன்படுத்திய அரிசி, கலச தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது விட முக்கியமானது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed