• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

Jun 15, 2022

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரயில் சேவைகள் 07:30 மணி முதல் 18:30 மணி வரை முன்னதாகவே தொடங்கி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கிளாஸ்கோ அல்லது எடின்பர்க் மற்றும் கார்ன்வாலில் உள்ள பென்சன்ஸ் வரை பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டோர்செட்டில் உள்ள போர்ன்மவுத், சவுத் வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ, வடக்கு வேல்ஸில் உள்ள ஹோலிஹெட், செஷயரில் உள்ள செஸ்டர் மற்றும் லங்காஷயரில் உள்ள பிளாக்பூல் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் சேவைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் போன்ற இடங்கள் வழியாக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்திற்கு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் மெயின் லைன் திறந்திருக்கும் பாதையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வேலைநிறுத்த நாட்களில் ரயில்கள் குறைந்த மணிநேரம் இயங்குவதால், இறுதிப் புறப்பாடுகள் வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்லும் கடைசி ரயில் 14:47 மணிக்கும், நார்விச்சிலிருந்து லண்டனுக்கு 16:00 மணிக்கும் கடைசி ரயில் 15:00 மணிக்கு லண்டனிலிருந்து எடின்பரோவுக்கும் புறப்படும்.

ஜூன் 20 முதல் ஜூன் 26ம் திகதி வரையிலான கால அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. பொதுவாக 20,000 ரயில் சேவைகளுடன் ஒப்பிடும்போது ரயில் சேவைகளின் எண்ணிக்கை சுமார் 4,500 ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 60 வீத சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படும் வாரத்தில் வேலைநிறுத்தம் இல்லாத நாட்களில் இடையூறுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed