• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திருவிழாவுக்கு கூடியிருந்தவர்கள் மீது மோதிய டிப்பர்

Jul 17, 2022

யாழில் உள்ள கோவில் திருவிழாவுக்காக கூடியிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்னர்.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ளது.

மணல் கடத்தல் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தில் பொலிஸார் வழிமறித்த டிப்பர் வாகனம் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி வழியாக தப்பி ஓடியுள்ளது.

இதன்போது பொலிஸார் துரத்திச் சென்றிருந்த நிலையில் நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கோவிலில் சப்பற திருவிழாவுக்கு கூடியிருந்த மக்கள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.

சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed