• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு; செலுத்தவில்லையெனில் துண்டிப்பு!

Sep 2, 2022

 யாழ்.வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருந்தோர் அவற்றை செலுத்திவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பணம் 3 ஆயிரம் ரூபாய்

மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப்பணம் 3 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்திற்கு மேலதிகமாக செலுத்தவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ் சுன்னாகம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று பெரும் தொகை நிலுவையி;ல் உள்ளநிலையில் மின்துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் அழுதங்கள் காரணமாக மீண்டும் இணைப்பு வழகப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed