• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் மோசடி வழக்கில் தமிழர் கைது..! காவல்துறை எச்சரிக்கை

Sep 29, 2022

கனடாவில் தமிழர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டொரோண்டோ வசிக்கும் விஜயரஞ்சன் இந்திரலிங்கம் (43) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் Facebook Market place ஊடாக 30 Gilder Drive, ஸ்கார்பரோவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தியிருந்தார்.

விளம்பரத்தை பார்த்து குறித்த நபரை சந்திக்க வந்தவருக்கு குடியிருப்பு காண்பிக்கப்பட்டதுடன் அந்த இடத்தின் உரிமையாளர் தான் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வாடகைக்கு ஒப்புக்கொண்ட பின்னர், மின்னணு பணப்பரிமாற்றம் உட்பட்ட வழிகளில் வைப்பு தொகை அனுப்பி வைக்கப்பட்டதுடன், பணம் செலுத்தியவர்களுக்கு குடியிருப்பிற்கு செல்வதற்கு திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சில காரணங்களுக்காக அந்த திகதி பிற்போடப்பட்டதுடன், பணம் வழங்கியவர்களின் அழைப்புக்கு பதில் வழங்குவதையும் குறித்த நபர் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னர் அல்லது வைப்பு தொகை வழங்கு முன்னர் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், வாடகைக்கு உள்ளது என்பதை கட்டிட உரிமையாளரிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed