• Di. Apr 16th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

 யாழ்.அராலி பகுதியில் தங்க நகைகள் கொள்ளை!

Okt 5, 2022

 யாழ்.அராலி பகுதியில் வீடொன்றை உடைத்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 6 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

வீட்டில் இருந்தவர்கள் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பதற்றமடைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி காணப்பட்டதுடன் , வீட்டில் வைத்திருந்த 06 பவுண் நகை திருட்டு போய்யுள்ளமையை தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed