• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்.

Nov 3, 2022

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (31-10-2022) மாலை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மறுநாளான நேற்று (02-11-2022) அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பயனின்றி (03-11-2022) வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்துள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed