• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அராலி பகுதியில் ஆலய மடப்பள்ளி உடைத்து ஒலிபெருக்கி சாதனம் திருட்டு

Nov 6, 2022

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலயத்தில் நேற்றிரவு ஒலிபெருக்கி சாதனம் களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் ஆலய மடப்பள்ளியின் கதவு திறந்திருந்ததனை அவதானித்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞர்கள் இந்தவிடயத்தை ஆலய நிர்வாகத்தினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆலய மடப்பள்ளியின் பூட்டு உடைத்து ஒலிபெருக்கி சாதனம் திருடப்பட்டமையை நிர்வாகத்தினர் உணர்ந்தனர்.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed