• So.. Juli 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு ஒருவர் பலி

Jan. 6, 2023

சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இளைஞனின் கதி குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.