யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை பறிப்பதற்காக மாமரமொன்றில் ஏறிய நிலையில் தவறிவிழுந்ததில் சுயநினைவை இழந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
யாழில் கொத்து றொட்டியில் உரோமம்?ஹோட்டலுக்கு சீல்.
இந் நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி
- வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் !
- பிறந்தநாள் வாழ்த்து.ஜசோ கண்ணன் (12.07.2026)
- புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
- பளை பகுதியில் மின்சாரம் தாக்கி 31 வயது இளைஞன் பலி

