யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை பறிப்பதற்காக மாமரமொன்றில் ஏறிய நிலையில் தவறிவிழுந்ததில் சுயநினைவை இழந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
யாழில் கொத்து றொட்டியில் உரோமம்?ஹோட்டலுக்கு சீல்.
இந் நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- போலி கடவுச்சீட்டுகளைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது
- மியான்மர் அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் பலி !
- ஜேர்மனியில் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் : 12 பேர் காயம்
- கேரளாவை மீண்டும் அச்சுறுத்துகிறது கொரோனா.
- இலங்கை பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்