வடக்கு கடல் பரப்பில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்)
குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.06.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச்(Jaffna) சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளதுடன் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் அவர்களது படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- முல்லைத்தீவில் மாட்டுடன் மோதி ஒருவர் பலி!! ஒருவர் படுகாயம்!
- வரப்போகும் சனி ஜெயந்தி ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
- இன்றைய இராசிபலன்கள் (22.05.2025)
- ஆசிரியர் வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல்!
- ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்