• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி

Juni 18, 2025

பிரித்தானியாவில் (United Kingdom) நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஈரான் ஒருபோதும் சரணடையாது…கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம்

பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய காரணத்தால் அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தல் உத்தரவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்திருந்தது. 

இருப்பினும், 2023 ஆம் ஆண்டு அவர் செய்த மேன்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணை அண்மையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்பின்பு குறித்த இலங்கையரை நாடு கடத்துவதில் உள்துறை அலுவலகம் தீவிரம் காட்டிய போதும், நீதிமன்றம் அதனை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.