ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தேற்சவம் இன்றாகும்.
ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் சூழ அன்னதானக் கந்தன் என போற்றப்படும் முருகப்பெருமானின் தீர்த்தோற்சவத்திற்கான விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய தீர்த்த திருவிழாவின் போது ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் புலம்பெயர் தமிழர்களும் தாயகத்திற்கு வருகை தந்து செல்வச்சந்நிதி முருகன் தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்றுடன் நிறைவுறுகின்றது.
இந்த நிலையில் நேற்று காலை தேர் திருவிழாவும், இன்று காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
- தாய்லாந்தை உலுக்கிய பாரிய தீ விபத்து…! 27 பலி
- தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று பாரிய வீழ்ச்சி
- குரு அஸ்தமனமாவதால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்
- கனடாவில் தெரு திருவிழாவில் துப்பாக்கிசூடு : இருவர் ஸ்தலத்தில் பலி
- பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி
