மத்திய பிலிப்பைன்ஸில் நேற்று (30) 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
செபு நபர கடற்கரைக்கு அருகில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலநடுக்கத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.
இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
- தங்க விலையில் அதிரடி மாற்றம் : வெளியான தகவல்
- கட்டுநாயக்கவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்
- யாழில் பிரான்சில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் கொலை!!
- இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்
- டென்மார்க்கில் உயிரிழந்து யாழ் இளைஞன்
