சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், ஏனைய மூன்று மாகாணங்களில், 640 பாடசாலைகள் மாத்திரம் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அந்த மாவட்டங்களிலுள்ள ஏனைய பாடசாலைகள் மீள திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
- சனி-புதன் உருவாக்கிய லாப திருஷ்டி யோகம் ; இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம்
- யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது
- பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பாவனை தொடர்பில் பரிசீலனை!
- அரச பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
- 10 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2026
