சுவிட்சர்லாந்தின் பெரும்பகுதிகளில் நேற்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இன்று காலைக்குள் 800 மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில், 20 முதல் 40 சென்டிமீட்டர் வரை புதிய பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
பனிப்பொழிவு தொடங்கியதிலிருந்து, சாப்லாய்ஸ் பகுதியில் 50 முதல் 60 சென்டிமீட்டர் வரை புதிய பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.
வலைஸ் ஆல்ப்ஸில் 60 முதல் 90 சென்டிமீட்டர் வரை, பெர்னீஸ் ஆல்ப்ஸில் 70 முதல் 110 சென்டிமீட்டர் வரை புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
வலைஸ் பகுதி மற்றும் சுவிஸ் அல்ப்ஸின் கிழக்கு வடக்கு சரிவுகளுக்கு, ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மிக உயர்ந்த பனிச்சரிவு அபாய நிலை அமுலில் உள்ளது
சுவிசிஸ் சூரிச்சில் முடங்கிய பேருந்து சேவைகள்!
சூரிச்சில் நேற்றுப் பிற்பகல் பேருந்து சேவைகள் முடக்கின. பனி மற்றும் பனிக்கட்டி காரணமாக நகரத்தில் உள்ள அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டதாக VBZ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சூரிச் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் (VBZ) செயல்பாட்டு நிலை அறிக்கையின்படி, சனிக்கிழமை பிற்பகல் நீண்ட காத்திருப்பு நேரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த இடையூறு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு பயணத்திற்கும் சற்று முன்னர் இணைய காலஅட்டவணையைச் சரிபார்க்குமாறும் VBZ பரிந்துரைத்திருந்தது
