புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி
- இன்றைய ராசி பலன்கள் (10.02.2026)
- பிறந்த நாள் வாழ்த்து. சுமிதா ஐெயக்குமாரன். (10.02.2026,சிறுப்பிட்டி)
- திருமணநாள் வாழ்த்து. துரையப்பா சுசீலா தம்பதிகள்.(10.02.2026,கனடா)
- யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம் !
