• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கடன் தொல்லையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

März 17, 2026

 யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (16) கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

வீட்டில் யாரும் இல்லாதபோது இளைஞன் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதையடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.