• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

März 29, 2026

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் நேற்று (28) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி, கணேமுல்ல காவல்துறை பிரிவில் 4 கிலோ 423 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,450 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.