• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தவறான முடிவெடுத்து உயிரிழந்த நடிகை!

Apr. 6, 2026

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும் இந்தியத் திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.

நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்பத் தகராறு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இவரின் உடலை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.