இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும் இந்தியத் திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.
நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்பத் தகராறு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இவரின் உடலை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
- இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
- யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!!
- சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)
- ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
