இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும் இந்தியத் திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.
நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்பத் தகராறு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இவரின் உடலை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் முடிவுக்கு வரப்போகும் கஷ்டங்கள்
- பிறந்தநாள் வாழ்த்து நிதர்சினி நிசாந்தன் (சோபிதா) 14.08.2026
- பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவிதா தேவராசா(14.08.2026)
- இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
- கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது
