அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஹெக்ஸெத், ஒரு மாபெரும் வான்வழித் தாக்குதல் மூலம் ஈரானின் மூலோபாய சொத்துக்கள் மீது அமெரிக்க இராணுவம் ஒரு பேரழிவுகரமான தாக்குதலை நடத்தியதாகக் கூறினார்.
„ஜனாதிபதி ட்ரம்ப் இந்தத் தருணத்தை உருவாக்கினார். ஈரான் இந்தப் போர்நிறுத்தத்திற்காகக் கெஞ்சியது, அது நம் அனைவருக்கும் தெரியும்.
‚ஒபரேஷன் எபிக் ஃபியூரி‘ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
‚ஒபரேஷன் எபிக் ஃபியூரி‘ போர்க்களத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மகத்தான வெற்றியாகும்… ‚ஒபரேஷன் எபிக் ஃபியூரி‘ ஈரானின் இராணுவத்தை முற்றிலுமாக அழித்து, வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு அதை போரிட இயலாததாக ஆக்கியது,“ என்று அவர் குறிப்பிட்டார்.சில மணி நேரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

„செவ்வாய்க்கிழமை இரவு நாங்கள் 800 தாக்குதல்களை நடத்தி, ஈரானின் பாதுகாப்புத் தொழில் தளத்தை அழித்தோம். ஈரானின் தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன,“ என்று அவர் குறிப்பிட்டார்.
