காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
- ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
- இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
- யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!!
- சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)
- ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
