• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலை விடுமுறை, பரீட்சைகளில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

Mai 5, 2026

பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சை கால அட்டவணையில் மாற்றத்தை கொண்டுவர கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி முறையைச் சீரமைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை மீண்டும் ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு வர முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவ குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் கல்வி முறைமை தொடர்ச்சியான தடைகளை எதிர்கொண்டு வந்தது.

கொவிட் 19 பெருந்தொற்று, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் சீரற்ற வானிலை போன்ற காரணங்களால் பாடசாலை நாட்காட்டி பாரியளவில் மாற்றமடைந்தது.

பழைய அட்டவணைக்கு மாறுவதற்கான ஒரு நிலைமாற்றக் காலமாக நடப்பு 2026 ஆம் ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2027 ஆம் ஆண்டு ஜனவரியில் புதிய கல்வியாண்டைத் தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த ஆண்டு (2026) எஞ்சியுள்ள இரண்டு பாடசாலை விடுமுறை காலங்களும் வழக்கத்தை விட நீண்ட நாட்களுக்கு வழங்கப்படும்.

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எவ்வித மாற்றமும் இன்றி திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் நடைபெறும்.

2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணைகள் மற்றும் பொதுப் பரீட்சைகள் அனைத்தும் அவற்றின் வழக்கமான கால அட்டவணையின்படி நடைபெறும் என்று செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.