வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடி குறித்து கணினி அவசரகால பதிலளிப்பு அமைப்பானது எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து, அழகான இந்தியப் பெண் ஒருவரைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் வீடியோ அழைப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் பண மோசடி குறித்தே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், இந்த மோசடிச் செயலால் நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் வழியாக வரும் காணொளி அழைப்புகளுக்குப் பதிலளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
