• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இன்று முதல் இலங்கை இலவச வீசா !

Mai 25, 2026

 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்க சுற்றுலா மேற்கொள்வதற்கான இலவச வீசா வழங்கும் நடைமுறை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், ​​பெல்ஜியம், கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மன், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே,

ஓமான், பாகிஸ்தான், போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இந்த விசேட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாலைத்தீவுகள், சீஷல்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டினர் நுழைவு செயலாக்கத்தை தொடர்ந்து கட்டணமின்றி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய, குடிவரவு விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், தகுதியுள்ள வெளிநாட்டு பிரஜைகள், இரட்டை நுழைவு அனுமதியுடன் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும், இலவச இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை பெற முடியும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ. சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.