• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை குடும்பமொன்றை வெளியேற உத்தரவு

Juni 2, 2026

பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய பிரித்தானியாவில் தொடர்ந்து தங்குவதற்கு பெற்றோருக்கு விசா நீடிப்பு மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சார்ந்திருப்போரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையை சேர்ந்த வருணி அரச்சிகே என்ற பெண் ஸ்கொட்லாந்தில் பராமரிப்புப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

குறித்த பெண்ணுக்கு 2031ஆம் ஆண்டு வரை விசா நீடிக்கப்பட்டுள்ள போதிலும், அவருடைய கணவர் மற்றும் 8, 5 வயது குழந்தைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வேதியியல் பட்டமும், பிரித்தானியாவின் டண்டீ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் வருணி பெற்றுள்ளார். முறையாக அனைத்து விசா கட்டணங்களையும் செலுத்தி, அங்கு வரி செலுத்தி வாழும் தங்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை குடும்பமொன்றை வெளியேற உத்தரவு | Sri Lankan Family Ordered To Leave Uk
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.