ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகக் கருதப்படும் உலகக் கோப்பை, மெக்சிகோவின் மெக்சிகோ சிட்டியில் நாளை (12.06.2026)அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளது.
இந்த ஆண்டுப் போட்டியானது, கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் 16 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
இப்போட்டித் தொடர் முழுவதும் மொத்தம் 104 போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பூர்வாங்கச் சுற்றுக்காக, 48 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்படும்.
அதன்பிறகு, 32 அணிகள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும், அங்கிருந்து போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெறும்
5 வாரங்களுக்கும் மேலாக நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப் போட்டி, ஜூலை 20 அன்று நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் போட்டியை நடத்தும் மெக்சிகோவும் தென்னாப்பிரிக்காவும், இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் இந்தத் தனித்துவமான போட்டியின் தொடக்க ஆட்டத்தில் களமிறங்கவுள்ளன.
முதல் போட்டி மெக்சிகோவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே நடக்கவிருந்தாலும், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனம் அந்த அணிகள் மீது இருக்கவில்லை.
அவர்களின் முழுமையான கவனம், நடப்பு உலக சாம்பியன்களான அர்ஜென்டினா மற்றும் போர்த்துகல் மீதுதான் காணப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம், நம் காலத்தின் இரண்டு மாபெரும் கால்பந்து நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதே ஆகும்.
