• Di. Okt 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடக்கில் 3ஆம் திகதிவரை மழை! வானிலை முன்னெச்சரிக்கை

Dez 31, 2021

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3ஆம் திகதிவரை கன மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது மழை பெய்யும். இந்த நிலைமை எதிர்வரும் 3ஆம் திகதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, நாளையும், நாளைமறுதினமும் வடக்கு மாகாணத்தில் சற்றுக் கன மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed