• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் எச்சரிக்கையை மீறி சென்றவர் ரயில் மோதிப் பலி.

Feb. 27, 2022

யாழ்., மாவிட்டபுரத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில் அறியாமையால் மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட வேளையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.