• Di.. Mai 12th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அவுஸ்ரேலியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாயும் மகனும்?

März 9, 2022

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அது காணாமல் போன ஹேமலதா சச்சிதானந்தம் (67), அவரது மகன் பிரமுத் (34) உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கால்வர் ஒன்றில் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தது. காரில் ஆவணங்கள் காணப்பட்ட போதும், இருவரும் இருக்கவில்லை.

இந்த நிலையில், ஆண், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அது தாய், மகனுடையதா என்பதை உறுதி செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.