• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

März 29, 2022

கோப்பாய் காவல் துறை  பிரதேசத்துக்குட்பட்ட மானிப்பாய் – கைதடி பிரதான வீதியின் உரும்பிராய் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என  காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், பிரித்தானி பிரஜா உரிமை கொண்டவர் எனவும் இவர் பிரித்தானியாவில் இருந்து தாயகம் திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் புலனாய்வு  காவல்  துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வீட்டில் சாடி ஒன்றுக்குள் 03 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.