• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் 30% குறைவடைந்துள்ள மதுபானங்களின் பாவனை

Jun 23, 2022

நாட்டில் மதுபானங்களின் பாவனை 30%இனால் குறைந்துள்ளதாக COPF எனப்படும் அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கான எதனோலின் அளவை வரையறுத்துள்ளமை, டீசல் மற்றும் உலை எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இன்னல்களுமே இதற்கான காரணங்களாகும் என அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார இன்னல்களே மதுபான பாவனை குறைந்துள்ளமைக்கான பிரதான காரணமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழு குறிப்பிட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed