• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நெல்லியடி பகுதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

Aug. 30, 2022

நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் வயோதிபரின் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உப்புக்கிணற்றடி, அல்வாய் மேற்கை சேர்ந்த கந்தவனம் அருமைராசா (வயது-75) என்பவராவார்.

இவ் மரணம் தொடர்பில் கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.