• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஓமந்தையில் 11 உயிர்களை பறித்த மின்னல்!

Okt. 12, 2022

வவுனியா பகுதியில் உள்ள பகுதியொன்றில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளது.

இந்த சம்பவம் ஓமந்தைப் பகுதியில் இன்று (12-10-2022) மாலை இடம்பெற்றுள்ளது.வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம்மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது.

இதன்போது, மாடுகள் மோய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.

இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7-ம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.