யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று பிற்பகல் 4 மணியளவில் ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய தும்பளை கிழக்கை சேர்ந்தவரே கடலில் மூழ்கிய நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.