• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று யாழ். அத்தியடி முருகன் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம்.

Mai 9, 2025

யாழ்ப்பாணம் அத்தியடி முருகன் ஆலயத்தின் சித்திரத்தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

ஊருக்கு ஏழாலை எனப்பெயர் வரக்காரணமாய் இருந்த ஏழு ஆலயங்களில் அத்தியடி முருகன் ஆலயமும் ஒன்று. அவற்றில் நான்கு ஆலயங்கள் ஒரே தேரோடும் வீதியனுடன் அமைந்திருப்பது ஊருக்குப்பெருமை.

ஏலவே மூன்று ஆலயங்கள் சித்திரத்தேர்களைக்கொண்ட ஆலயங்களாய் அமைந்திருப்பது நீங்கள் அறிந்ததே. இன்று நான்காவது ஆலயமான அத்தியடி முருகன் ஆலயமும் சித்திரத்தேர் வெள்ளோடத்தைக் கண்டுள்ளமை மிகச்சிறப்பு.

விளிசிட்டி,ஏழாலை தெற்கில் வசித்தவர்களான அமரர்கள் இராசையா,சந்திரவதனா ஆகியோரின் நினைவாக அவர்கள் குடும்பத்தாரால் அமைக்கப்பட்ட சித்திரத்தேரின் வெள்ளோட்டம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட யாழ். அத்தியடி முருகன் ஆலயத்தின் வெள்ளோட்டம் | The Chitthiratheer Athiadi Murugan Temple Jaffna
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed