• Do.. Mai 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு

Mai 22, 2025

யாழ்ப்பாணத்தில் வீட்டில் தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது-26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து வரை வீட்டார் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிலையில், இருதய அறைக்குள் இரத்த கசிவு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed