யாழ்ப்பாணம் தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
3 ஆம் ஆண்டு நினைவு! திரு அம்பலவாணர் சண்முகம். (சிறுப்பிட்டி 17.06.2024) –
இன்றைய தினம் (2024.06.16) தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று மதியம் கடைக்கு சென்ற போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
செல்லப் பிராணியால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி
இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
குறித்த மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
- யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
- யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது
- எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)
- வியாழன் சதுர்த்தி விரதம்