கல்கிசைபகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (5) அதிகாலை கல்கிசை – கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிந்த 19 வயதுடைய இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.