• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

Mai 13, 2022

யாழில் பெருமளவு போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed