• Mi.. Mai 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் சிசு மரணம்

Nov. 20, 2022

பிறந்த 50 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் சாவகச்சேரியில் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.

பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில் பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து சென்றுள்ளனர்.

எனினும் சிசு ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதோடு சளி காரணமாக சிசு உயிரழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இன்மையால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed