• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை

Nov 25, 2022

 யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பிரதேசமக்கள் தெரிவித்தனர்.

அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே குறித்த முதலை உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று காலை வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாகவும் அப்பகுதியால் செல்பவர்கள் அவதானத்துடன் செல்லுமாறும் ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed