• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறை தண்டனை! சுவிஸ் அரசு!

Dez 26, 2021

சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது சட்டவிரோதமானது என்று சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

அந்த வகையில், இந்த குற்றத்திற்காக ஒருவர் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதற்காகவே ‘கொரோனா வைரஸ் பார்ட்டிகள்’ (Coronavirus Parties) ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மத்தியில் இது பிரபலமடைந்துள்ளது. தடுப்பூசி பெறாமலேயே ஹெல்த் பாஸைப் பெறுவதற்காகவே நோய்த்தொற்றுக்கு ஆளாக விரும்புகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed