• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்

Feb 3, 2024

 

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் அசைவ உணவை விரும்புவார்கள்  அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. 

சில பேர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.ஆனால் ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ஆட்டிறைச்சி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு ஆட்டிறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி!

பாதக விளைவுகள்

ஆட்டிறைச்சியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது. மேலும் இது நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படவும் இது முக்கிய காரணமாக அமைகின்றது. 

ஆட்டிறைச்சியை அதிகமாக உட்கொள்வதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. இது படிப்படியாக இதய நோய்க்கு வழிவகுக்கிறது. உடல் எடை அதிகரிப்பிலும் ஆட்டிறைச்சி தாக்கம் செலுத்துகின்றது.

ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே ஆட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.மேலும் ஆட்டிறைச்சி சமைக்கும் போது முடிந்தவரை குறைந்த எண்ணெயில் சமைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed